திருக்குறள் குறித்த பிரதமர் மோடியின் கருத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழுக்கும், தமிழருக்கும் பிரதமர் பெருமை சேர்த்துவிட்டதாக முதலமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இனம்,மொழி, நாடு கடந்து அனைத்து தரப்பு மக்களையும் நெறிப்படுத்தும் நூல் திருக்குறள் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதேபோல், துணை முதலமைச்சர் பன்னீர் செல்வமும் , பிரதமருக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.