ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் உள்ள ஐஎன்எஸ் பருந்து விமானப்படை தளத்தில் 41 வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடைபெற்றது. இந்த பரிசோதனையில் 35 வீரர்களுக்கு தொற்று இருப்பது தற்போது வரை கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ்பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 67,468 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 866 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 35 வீரர்கள் உள்பட 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 635-ஆக உயர்ந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 301 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர்.