டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை 509,446 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 18,276 புதிய கேஸ்கள் இந்தியாவில் பதிவாகி உள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிக வேகம் எடுத்துள்ளது.
இந்தியாவில் இதுவரை கொரோனா காரணமாக 15,689 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 381 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனாவில் இருந்து 295,917 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 197,840 ஆக்டிவ் கேஸ்கள் இந்தியாவில் உள்ளது.
தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்ட இருக்கிறது, இதனால் கடந்த 6 நாட்களில் 4 லட்சத்திலிருந்து 5 லட்சமாக கேஸ்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.